search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி சோதனை"

    • கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கலை தடுக்க 98 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்திரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழைய குற்றவாளிகளை கண்காணிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்திரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழைய குற்றவாளிகளை கண்காணித்து கஞ்சா விற்பனை செய்தால் அவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பாற்வையில் இன்ஸ்பெக்டர்கள், தலைமையில் 37 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் கஞ்சா சம்மந்தமான சோதனை நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது. கடலூர் உட்கோட்ட காவல் அதிகாரிகள் திருப்பாதிரிபுலியூர் , குப்பங்குளம் , சாலக்கரை , தூக்கணாம்பாக்கம் , கடலூர் பெண்ணையாறு கரையோரம் , சுண்ணாம்புகார தெரு . புதுப்பாளையம் , ரயில் நிலையம் , தைக்கால் ஆகிய இடங்களில் சோதணை மேற்கொள்ளப்பட்டது . சிதம்பரம் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் , புதுச்சத்திரம் ரயில்வேகேட் , வில்லியனூர் பண்ருட்டி காடாம்புலியூர் , பெரியகாட்டுசாகை , மாளிகம்பட்டு . ஆண்டிக்குப்பம் , நெல்லிக்குப்பம் , பி.என். பாளையம் , நெல்லிகுப்பம் , மேல்பட்டாம்பாக்கம் . நடுவீரப்பட்டு பேருந்து நிலையம் , சி.என்.பாளையம் , பாலூர், விருத்தாச்சலம் பாலக்கரை , பெண்ணாடம் , ரயில்வே ஜங்ஷன் , பழையபட்டினம் கீரனூர் , சோழன் நகர், சேத்தியாத்தோப்பு கீழ்புளியங்குடி , சந்தைதோப்பு , லால்பேட்டை , கோட்டைமேடு , அய்யன்குடி , திட்டக்குடி பேருந்துநிலையம் , ஆவினங்குடி , சிறுமங்கலம் , ராமநத்தம், , நல்லூர் , சிறுபாக்கம் , மங்களுர் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் சோதனையின்போது கஞ்சா எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    ×